ஒளிபடைத்த கண்னினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினய் வா வா வா
களிபடைத்த மொழியினாய் வா வா வா
கடுமை கொண்ட தோளினாய் வா வா வா
தெளிவுபெற்ற மதியினாய் வா வா வா
சிறுமைகண்டு பொங்குவாய் வா வா வா
எளிமைகண்டு இரங்குவாய் வா வா வா
ஏறுபோல் நடையினாய் வா வா வா
இளையபர தத்தினாய் வா வா வா
எதிரிலா வலதினாய் வா வா வா
ஒளியிழந்த நாட்டிலே நின்றேறும்
உதயஞாயி றொப்பவே வா வா வா
களையிழந்த நாட்டிலே முன்போல
களைசிறக்க வந்தனை வா வா வா
விளையுமாண்பு யாவையும் பார்த்தன்போல்
விழியினால் விளக்குவாய் வா வா வா
----------------------
Thanks to (Fan of Bharathyar) for correcting these lyrics. May 26, 2008